வர்த்தகங்களுக்கு உதவ மூத்த ஊழியரணியைப் பயன்படுத்துதல், மாற்றங்களுக்கு ஏற்ப செயல்பட ஊழியர்களுக்கு உதவுதல், படிப் படியாக மேம்பட வாய்ப்பளிக்கும் வேலையிடங்கள் ஆகியவை வருங்கால சிங்கப்பூரில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற் படுத்தும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார். மனிதவள அமைச்சின் 20ஆம் ஆண்டு விழா நேற்று மரினா பே அருகே நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் டியோ, அமைச்சின் ஊழியர்களிடம் உரையாற்றினார்.
"புத்தாக்கமிக்க வேலையிடங்கள், அர்த்தமுள்ள வேலைகள், வளர்ச்சி அடைய வாய்ப்புகள் என வேலைகளுக்கான எதிர்காலம் ஒளிமயமாக இருக்கிறது. "ஆனால் இடையூறுகள் மறு சீரமைப்பு ஆகியவற்றால் நிலை யற்ற தன்மையும் உள்ளது," என்றார் அமைச்சர் டியோ. வர்த்தகங்கள் உருமாறவும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு ஊழி யர்கள் வேலை செய்ய உதவவும் மனிதவள அமைச்சு துடிப்புடனும் நடைமுறை சாத்தியத்துடனும் செயல்படவேண்டும் என்றார் அவர். "சிங்கப்பூரர்களின் இலட்சியங் களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பின்தங்கிவிடாதபடியும் அனைவரும் முன்னேற்றம் காண வும் ஒன்றிணைந்து செயல்படு வோம்," என்றார் அமைச்சர். 'ஒர்க்ஃபேர்', 'அடேப் அண்ட் குரோ', 'சில்வர் சப்போர்ட்' போன்ற திட்டங்கள் ஊழியர் களுக்குக் கூடுதல் பாதுகாப்பைத் தந்துள்ளபோதும் ஊழியர் நலனுக் காக மேலும் பல முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று திருமதி டியோ கூறினார்.
மனிதவள அமைச்சின் 20ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ (நடுவில்), துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது ஆகியோர் அமைச்சின் ஊழியர்களுடன் சேர்ந்து காலப் பெட்டகத்தை மூடி பூட்டினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்