அதிகமான வெளிநாட்டு ஊழியர் கள் இவ்வாண்டு வெளிநாட்டு ஊழியர் நிலையத்திடமிருந்து $500,000க்கு மேற்பட்ட நிதி உதவி பெற்றுள்ளனர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கொடுக் கப்பட்ட நிதி உதவியைக் காட்டி லும் இரு மடங்கு என்றும் இந்த நிதி ஊழியர்களுக்கு உணவளித் தல், சம்பள கோரிக்கையை முழு மையாகப் பெறாதவர்களுக்கு நிதி உதவி அளித்தல் போன்றவற்றுக் குச் செலவிடப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை வெளிநாட்டு ஊழியர் நிலையம் 530க்கு மேற்பட்ட ஊழியர்களுக் குப் புகலிடம் அளித்துள்ளது. இது கடந்த ஆண்டு எண்ணிக் கையைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். மேலும் அவர்களுக்கு 87,000 சாப்பாட்டை நிலையம் அளித் துள்ளது.
"இந்த ஆண்டு எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 'டிஏடிஎம்' எனப்படும் சச்சரவுக்குத் தீர்வு காணும் முத்தரப்புக் கூட் டணிக் குழுவால் எங்களிடம் அனுப்பப்பட்ட பிரச்சினைகளின் எண்ணிக்கை அதிகரித்ததே கார ணம்," என்றார் வெளிநாட்டு ஊழி யர் நிலையத்தின் தலைவர் திரு இயோ குவாட் குவாங்.
அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு ஊழியர் நிலையம் தெருசான் பொழுதுபோக்கு மையத்தில் நேற்றுக் காலை நடத்திய மூன்று கிலோ மீட்டர் ஓட்டத்தில் சுமார் 5,000 ஊழியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்