சபரிமலையில் கொந்தளிப்பு; வெடிகுண்டு வீச்சு; 1,300க்கு மேற்பட்டோர் கைது

இந்தியாவின் சபரிமலை விவகா ரம் தொடர்பில் நடத்தப்பட்ட வன் முறைச் சம்பவங்களின் தொடர் பில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'புரோக்கன் விண்டோ' போலிஸ் நடவடிக்கையின்கீழ் மேலும் பலர் தேடப்பட்டு வருகின்றனர்-. உச்ச நீதிமன்ற அனுமதிக்கு ஏற்ப சபரிமலை சன்னிதானத்தில் இரு பெண்கள் தரிசனம் செய் ததைத் தொடர்ந்து அதற்கு எதி ராக கேரளாவில் நேற்று முன்தினம் கடையடைப்புப் போராட்டம் நடை பெற்றது. அப்போது ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந் தன.

அப்போது சந்திரன் உன்னி தன், 55, என்பவர் கொல்லப்பட்டார். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமுற்ற னர். 99 பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்ததாக கேரள அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் தெரிவித்தார். அரசியல் கட்சித் தொண்டர் களுக்கும் போலிசாருக்கும் இடை யில் பல இடங்களில் மோதல் நடந்ததால் வியாழக்கிழமை முழு வதும் கேரள மாநிலத்தில் பதற்றம் நிலவியது. நேற்று பதற்றம் தணிந் ததாகக் கருதிய நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தின் பெரம்பரா என்னுமிடத்தில் மலபார் தேவஸ்தான வாரிய உறுப்பினர் சசிகுமார் என்பவரின் வீட்டின் மீது நேற்று அதிகாலையில் வெடி குண்டு ஒன்று வீசப்பட்டது. முன்னதாக வியாழக்கிழமை இரவில் பாஜக கட்சித் தொண் டர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பதிலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினரின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.

நேற்று பிற்பகல் வரை 1,319 பேர் கைது செய்யப்பட்டதாகவும் 801 வழக்குகள் பதிவு செய்யப்பட் டதாகவும் போலிசார் தெரிவித் தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவில் இலங்கையைச் சேர்ந்த சசிகலா, 46, என்னும் தமிழ்ப்பெண் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்ததாக போலிசார் காணொளி ஆதாரத் துடன் ஊடகங்களிடம் தெரிவித் தனர். முன்னதாக தரிசனத்துக்குப் பதிவு செய்தபோது அந்தப் பெண் சமர்ப்பித்த சான்றிதழில் 3 டிசம்பர் 1972ல் அவர் பிறந்ததாகக் குறிப் பிடப்பட்டு இருந்தது.

சபரிமலை சன்னிதானத்தில் தமக்கு அனு மதி மறுக்கப்பட்டதாக நேற்று அந்தப் பெண் செய்தியாளர்களி டம் கூறியதை கேரள போலிசார் ஏற்கவில்லை. அதன் தொடர்பில் போலிஸ் வெளியிட்ட காணொளியில் வியாழன் இரவு 10.46 மணிக்கு சபரிமலையில் ஆண் பக்தர்களின் கூட்டத்தினிடையே சசிகலா செல் வது தெரிந்தது. ஆனால் போலி சார் அனுமதியுடன் தாம் தரிசனம் செய்ததை அப்பெண் செய்தியாளர் களிடம் ஏன் மறுத்தார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியது. போலிசார் உறுதி செய்ததைத் தொடர்ந்து சபரிமலையில் தரி சனம் செய்த மூன்றாவது பெண் சசிகலா ஆவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!