மீண்டும் ராதிகா ஆப்தே நடித்த நிர்வாணக் காட்சி இணையத் தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது 'பொம்பாய்ரியா' என்ற படத்துக்காக அவர் நடித்த காட்சி. இதுபற்றி இப்படத்தின் இயக்குநர் மைக்கேல் ஈவார்ட் விளக்கம் அளித்துள்ளார். "கதைப்படி ராதிகாவின் கைபேசியை ஒருவர் திருடிவிடுவார். அதை திருடியவனை ராதிகா ஆப்தே தீவிரமாக துரத்திச் செல்வார். ஏனென்றால், அதில் அவர் குளிக்கும் காட்சி காணொளியாகப் பதிவாகி இருக்கும்.
"ஹோலி கொண்டாட்டத்துக்குப் பிறகு உடலில் இருக்கும் வண்ணப்பொடிகளைச் சுத்தம் செய்வதற்காக குளித்தபோது எடுத்த காட்சி அது. இந்தக் காட்சியில்தான் அவர் தயங்காமல் நடித்து எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்," மற்றபடி நாங்கள் இதை வைத்து மலிவு விளம்பரம் எதையும் தேடவில்லை. அதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்றார் மைக்கேல்.