சசிகுமார், மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் புதுப்படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’. பொன்ராம் இயக்கி உள்ளார்.
கிராமம் சார்ந்த கதையுடன் வணிக ரீதியிலான அம்சங்களை சேர்ப்பதில் கைதேர்ந்தவர் இவர். கிராமத்து பின்னணி சார்ந்த கதைகளில் ஆர்வம் உள்ளவர் சசிகுமார்.
இந்நிலையில் இந்தப் புதிய படத்துக்காக இருவரும் கைகோர்த்துள்ளனர். ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தில் இவர்களுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
படத்தை இயக்குவதுடன் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றுக்கும் பொன்ராம் பொறுப்பேற்றுள்ளார்.
வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைத்துள்ளார். ஊரடங்கு முடிந்த கையோடு இப்படம் வெளியாகும் எனத் தகவல்.