கொரோனா பாதிக்கப்பட்டவர்
களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை, தடுப்பூசி மறுக்கப்படுகிறது என்கிற காரணங்
களைச் சொல்லி மருத்துவ
மனையில் உள்ள மருத்துவர், தாதியர்களை தாக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்த தாக்குதல் குறித்து 'அனேகன்' படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் தன் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
"மருத்துவர்கள், தாதியர்கள் தாக்கப்படுவது மனவருத்தத்தை தருகிறது. அவர்கள் தங்கள் குடும்பங்களை மறந்து, தங்களுக்கு எந்த நேரத்திலும் தொற்று ஏற்படலாம் என்பதை அறிந்து உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள். பாதுகாக்கப்பட வேண்டியர்களைத் தாக்குவது கண்டனத்துக்குரியது. மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்கள் பணிகளையும் நாம் முழுமையாகப் புரிந்து கொண்டால் இத்தகைய சம்பவங்கள் நடக்காது.
"எனது தந்தையை கொரோனாத் தொற்றில் இருந்து அவர்கள் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.
"அதற்காக அவர்கள் பட்ட கஷ்டத்தையும் கடும் உழைப்பையும் நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்," என்று அமைரா தஸ்தூர் பதிவிட்டு இருக்கிறார்.