'அண்ணாத்த' படத்தில் தமக்கு அழகான கதாபாத்திரம் அமைந்துள்ளதாக குஷ்பு கூறியுள்ளார்.
அப்படத்தின் படப்பிடிப்பு பழைய நாள்களை நினைவூட்டியதாகவும் 'அண்ணாமலை', 'படையப்பா', 'முத்து' உள்ளிட்ட படங்களில் பார்த்த பழைய ரஜினியை மீண்டும் திரையில் பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"ரஜினி சாரிடம் பேசுவதற்கு நானும் மீனாவும் சற்று தயங்கினோம். காரணம் நீண்ட காலத்துக்குப் பிறகு அவரோடு நாங்கள் பணிபுரிகிறோம். எனவே அவர் எப்படிப் பேசுவார் என்று எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
"ஆனால், அவரே எங்களைத் தேடி வந்து பேசினார். அவர் மிகவும் அன்பானவர். 28 ஆண்டுகளில் அவரிடம் எதுவும் மாறவில்லை. அவர் இப்போதும் முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் சிறுவனைப் போல கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் இருக்கிறார்," என்கிறார் குஷ்பு. ஒருமுறை படப்பிடிப்புக்கு ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்காக ஒட்டுமொத்த படக்குழுவிடமும் ரஜினி மன்னிப்பு கேட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இப்பணிவுதான் அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது எனக் கூறியுள்ளார்.