இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் உருவாகி உள்ளது ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இது அவரது எட்டாவது படம்.
நன்றி உணர்வு உள்ள எந்த மனிதனும் தவறு செய்ய வாய்ப்பு இல்லை என்பதுதான் கதைக்கரு என்கிறார்.
படத்தின் நாயகன் ஆர்யா என்பதாலும் அவரது வித்தியாசமான தோற்றமும் படம் குறித்த எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
“எனது முந்தைய படங்களில் உணர்வுபூர்வமான குடும்பக் கதைக்குள் சில அடிதடிச் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்தப் புதிய படத்தில் ஒன்பது பெரிய சண்டைக் காட்சிகளும் அவற்றுள் ஒரு குடும்பக்கதையும் இடம்பெற்றிருக்கும்,” என்கிறார் முத்தையா.
இப்படத்தின் தலைப்பு காரணமாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.
ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏவின் பெயரைத் தலைப்பாக வைத்திருப்பதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை என்று படக்குழு விளக்கமளித்துள்ளது.
“பொதுவாகவே என் படத்துக்கான தலைப்பைச் சூட்டும்போது, அது கதையைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ‘குட்டிப் புலி’ படத்தில் இருந்து ‘காதர்பாட்சா’ வரை அப்படித்தான் இருக்கும்.
“ஒரு குழந்தைக்கு ஏனோதானோ என்று பெயர் சூட்டுவோமா? நமக்கு மிகவும் பிடித்தமானவர்கள் பெயரையோ, நண்பர்கள், என்றும் மானசீகமாக நம் மன தில் நிலைத்து நிற்பவர்களின் பெயரையோ வைப்்போம்.
“காதலி பெயரையோ அல்லது காதலன் பெயரையோத்தான் மகனுக்கோ மகளுக்கோ வைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நல்ல நட்பின் அடிப்படையிலும் இது சாத்தியப்படும். “ஒரு தாய் தன் நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாகத் தன் மகனுக்கு ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்று பெயர் சூட்டுகிறார்.
“அப்படி என்ன விசுவாசம்? அப்பெயரைச் சூட்டவேண்டிய அவசியம் என்ன? அந்த அம்மாவுக்கும் அந்தப் பெயர் உள்ள மற்றொருவருக்கும் இடையே உள்ள பந்தம் என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைதான் இப்படத்தின் முழுமையான கதை,” என்கிறார் முத்தையா.
கொரோனா நெருக்கடி காலத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த ‘டகரு’ என்ற படத்தைப் பார்த்தாராம். அது பிடித்துப்போகவே, தமிழ் மொழிமாற்றத்துக்கான உரிமையை வாங்கி உள்ளார்.
“பிறகு அந்தக் கதையைத் தமிழுக்கு ஏற்றதுபோல் மாற்றி அமைத்தேன். அப்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
“அந்தச் சமயத்தில் அவர் ஆர்யா நடித்த ‘மகாமுனி’ படத்தை தயாரித்துக்கொண்டிருந்தார். ஆர்யாவை வைத்து ஒரு படம் இயக்கலாமே என்று அவர் கேட்டபோது, என்னிடம் தயார்நிலையில் இருந்த ‘டகரு’ படத்தின் கதையை நான் செய்த மாற்றங்களுடன் விவரித்தேன். தயாரிப்பாளர், நாயகன் இருவருக்கும் கதை பிடித்துப் போகவே, உடனடியாக வேலைகளைத் தொடங்கிவிட்டோம்.
“ஆர்யாவைப் பொறுத்தவரை இயக்குநருக்கு ஏற்ற நடிகர் என்று தயக்கமின்றிச் சொல்லலாம். நடிப்பிலும் உடல்நலத்தைப் பேணுவதிலும் அவர் ஒட்டுமொத்த திரையுலகத்துக்கும் நல்ல முன்னுதாரணம் என்பேன்.
“காலையில் ஆறு மணிக்கு நடைப்பயிற்சி, பிறகு சைக்கிளிங் என்றுதான் அவரது நாள் தொடங்கும். உலகின் எந்த மூலையில் படப்பிடிப்பு நடந்தாலும், அவரது இந்த அன்றாட நடைமுறைகள் மாற வாய்ப்பில்லை.
“இந்தப் படத்துக்காக அவர் தோற்றத்தை மாற்றிக் கொண்டதுடன், வழக்கம்போல் முழு அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்.
“கதாநாயகி சித்தி இட்னானிக்கு தமிழ் தெரியாது என்றாலும் தமிழ்ப் பெண்ணின் சாயல் உள்ளது. ஒரு கிராமத்துக் கதைக்கு ஏற்ற நடிப்பை குறையின்றி அளித்துள்ளார்.
“சித்தி இட்னானி மும்பையைச் சேர்ந்தவர். ஆனால் அவரைத் திரையில் காணும்போது அச்சு அசல் தமிழ்ப் பெண்ணாகக் காட்சி அளிப்பார்.
“இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார் இயக்குநர் முத்தையா.
ஆர்யா
, : தமிழகத்