ஆஸ்திரேலியா: கூடுதல் கட்டுப்பாடு
மெல்பர்ன்:கொரோனா கிருமித்தொற்றைத் தீவிரமாகத் தடுக்கும் முயற்சியாக ஆஸ்திரேலியா, சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று தெரிவித்தார். “ஆஸ்திரேலியாவில் தற்போது கிருமித்தொற்றால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பயணக் கட்டுப்பாடு இம்மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுக்கப்பட்டதிலிருந்து எந்தப் புதிய கிருமித்தொற்று சம்பவமும் நிகழவில்லை,” என்றும் அவர் கூறினார்.