தோக்கியோ டாக்சி ஓட்டுநருக்கு கொரோனா கிருமித்தொற்று
தோக்கியோ: ஜப்பான் தலைநகரம் தோக்கியோவில் உள்ள டாக்சி ஓட்டுநருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு அந்தக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அவரது டாக்சியில் சீனப் பயணிகள் பயணம் செய்ததாக ஜப்பானின் சுகாதார அமைச்சு கூறியது. இதன் காரணமாக ஜப்பானின் சுகாதார அதிகாரிகள் விழிப்புநிலையில் இருந்து நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.