ஈரான் மற்றும் இத்தாலியில் கிருமித்தொற்று மரணங்கள்
டெஹ்ரான்: கொரோனா கிருமித்தொற்றுக்கு மேலும் மூவர் பலியாகி விட்டதாகவும் இப்போது மரணமுற்றோரின் எண்ணிக்கை ஐந்துக்கு உயர்ந்துள்ளது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. அந்த மரணங்கள் நாட்டின் எந்தப் பகுதியில் நிகழ்ந்தன என்பதை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இதற்கிடையே, இத்தாலியில் இரண்டு கொரோனா கிருமித்தொற்று மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பத்து நாட் களுக்கு முன் வேறு ஒரு சுகாதாரப் பிரச்சினைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு 78 வயது அட்ரி யானோ டிரெவிசானுக்கு கொரோனா கிருமி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் ஆடவரின் உடல்நிலை மோச மாகி நேற்று முன்தினம் மரணமடைந்ததாக இத்தாலியின் சுகாதார அமைச்சர் கூறினார். ஆடவரின் மரணம் நிகழ்ந்த சில மணி நேரத்துக்குப் பின் லொம்பாடி பகுதியில் மாது ஒருவர் கிருமித்தொற்றால் மாண்டார் என்றும் நேற்று கூறப்பட்டது.