கொவிட்-19: ஆஸ்திரேலியாவில் 594,300 பேர் வேலையிழப்பு

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் 594,300 பேர் வேலைகளை இழந்ததாக புள்ளிவிவரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிட்டது. படம்: ஏஎஃப்பி

ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக ஏராளமான தொழில்துறைகள் மூடப்பட்டன.

இதனால் 594,300 பேர் வேலைகளை இழந்ததாக புள்ளிவிவரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.

கடந்த மார்ச் மாதம் ஊழியரணி பங்கேற்பு விகிதம் 66 விழுக்காடாக இருந்தது. ஆனால், ஏப்ரலில் அது 63.5 விழுக்காடாக குறைந்ததால் வேலையின்மை விகிதம் 6.2 விழுக்காடாக கூடியது.

தகுதிக்கேற்ற வேலையைவிட குறைந்த அளவு திறன் தேவையுடைய வேலைகளைச் செய்பவர்களின் விகிதம் 4.9 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகரித்து 13.7 விழுக்காடாக உச்சத்தை எட்டியது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமித்தொற்று கட்டுக்குள் இருப்பதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன.

ஜூலை மாதத்திற்குள் பொருளியலை மீட்டு 850,000 பேரை வேலைகளில் சேர்க்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.


முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

ஆஸ்திரேலியா
கொவிட்-19
வேலையிழப்பு
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!