விஞ்ஞானிகள்: மனித உடலில் நிலையான கொவிட்-19 நோய் எதிர்ப்பு உள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன

கொவிட்-கிருமிக்கு எதிரான மனித உடலின் எதிர்ப்பு சக்தியைக் கண்காணித்துவரும் விஞ்ஞானிகள், மனிதர்களிடையே இந்நோய்க்கு எதிராக வலுவான, நிலையான நோய் எதிர்ப்புத் தன்மை உருவாவதைக் கோடிகாட்டும் அறிகுறிகள் காணப்படுவதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

நோய் முறிகளும், கிருமியை அடையாளம் காண ஆற்றல் கொண்டுள்ள ‘பி செல்’, ‘டி செல்’ போன்ற உயிரணுக்கள், கிருமித்தொற்று நீங்கிய சில மாதங்கள் ஆன பிறகும் மனித உடம்புகளில் தொடர்ந்து இயங்குகின்றன. இது மற்ற கிருமிகளுக்கான நீடித்த நோய் எதிர்ப்புக்கு அறிகுறியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த நோய் எதிர்ப்புத்தன்மை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று ஆய்வாளர்களால் தற்போது முன்னுரைக்க முடியவில்லை. ஆயினும், மீண்டும் கிருமிப்பரவலுக்கு ஆளாவோரின் உடல் அதனை வெற்றிகரமாக எதிர்க்கும் வாய்ப்பு நன்றாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனாவை செயலிழக்கச் செய்யும் நோய்முறிகள், நோயாளிகள் குணமடைந்த சில மாதங்களுக்குப் பிறகும் அவர்களது உடலில் தங்கும்.

“நடக்கவேண்டிய அனைத்தும் நன்றாகவே நடக்கின்றன,” என்று ஆய்வு ஒன்றில் பணியாற்றும் தொற்றுநோயியல் நிபுணர் தீப்தா பட்டாச்சாரியா தெரிவித்தார்.

நோய்ப்பரவலுக்கு முடிவு உண்டா என அஞ்சியோருக்கு ஆய்வுகளின் மற்ற முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!