புதிதாக சமூகத்தில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று

சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 26) புதிதாக ஐந்து பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் ஒருவர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர் என்று தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் இன்று யாருக்கும் புதிதாக தொற்று இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் 16 நாட்களில் முதன் முதலாக இன்றுதான் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளது. கிருமி தொற்றிய மற்ற நால்வரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

அந்நால்வரும் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. புதிதாக இன்று கிருமி தொற்றிய ஐவரையும் சேர்த்து இங்கு மொத்தம் 58,195 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

புதன்கிழமையன்று புதிதாக ஏழு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் அனைவருக்கும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்து இருந்தது. அந்த ஏழு பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.

சிங்கப்பூர்
சமூக தொற்று
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!