மலேசியா: புதிய உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புக்கிட் பிந்தாங் பகுதியில் வெறிச்சோடி காணப்படும் வீதிகள். படம்: இபிஏ

மலேசியாவில் கொவிட்-19 தொற்று தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்றைய (ஜூலை 15) நிலவரப்படி அங்கு புதிய உச்சமாக 13,215 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

கடந்த செவ்வாய்க்கிழமை பத்தாயிரத்தைத் தாண்டிய கொரோனா தொற்றுச் சம்பவங்கள் இன்று 13,000ஐத் தொட்டன.

கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 880,782 என்று அந்நாட்டு சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா டுவிட்டரில் பதிவிட்டார்.

சிலாங்கூரில் ஆக அதிகமாக 6,120 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாயின. அடுத்த நிலைகளில் நெகிரி செம்பிலானில் 1,603 பேருக்கும் கோலாலம்பூரில் 1,499 பேருக்கும் புதிதாகத் தொற்று கண்டது.

சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மருத்துவமனைகள், கிருமிப் பரிசோதனை நிலையங்கள், தனிமைப்படுத்தப்பட்டோருக்கான நிலையங்கள் ஆகியவை கூட்டநெரிசலால் திணறுவதைக் காட்டின.

தொழிற்சாலைகளிலும் வேலையிடங்களிலும் பரிசோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதே தொற்று எண்ணிக்கை கூடியதற்குக் காரணம் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

மலேசியா
கிருமித்தொற்று
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!