கொரோனா பரவல்: உச்ச விழிப்புநிலையில் சீனா

பெய்ஜிங்கின் சாங்பிங் மாவட்டத்தில் ஹொங்ஃபுயுவான் குடியிருப்புப் பகுதியில் புதிதாக கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. படம்: இபிஏ

பெய்ஜிங்: தலைநகர் பெய்ஜிங் உட்பட சீனாவின் பல பகுதிகளில் மீண்டும் கொவிட்-19 தொற்று பரவத் தொடங்கியுள்ளது.


இதனால், வரும் நாள்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


அண்மைய தொற்றுப் பரவலால் 11 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கு உருமாறிய ‘டெல்டா’ கிருமியே காரணம் எனக் கூறப்படுகிறது.


சீனா தனது எல்லைகளை மூடியுள்ள நிலையில், பெரும்பாலும் உள்ளூர்ச் சுற்றுப்பயணிகள் மூலமாக அங்குத் தொற்று பரவி வருவதாகச் சொல்லப்படுகிறது.


சீனாவில் நேற்று திங்கட்கிழமை புதிதாக 39 பேர்க்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 35 பேர் சமூகத்தில் இருப்பவர்கள்.


மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனாவில் கொரோனா பாதிப்பு மிகக் குறைந்த அளவிலேயே இருந்தாலும், அறவே தடுக்கும் அணுகுமுறையைச் சீனா கையாண்டு வருகிறது. அதாவது, ஒருவர் பாதிக்கப்பட்டாலும்கூட தனிமைப்படுத்தல், அந்தக் குடியிருப்புப் பேட்டையையே முடக்கநிலையில் வைத்தல் எனக் கடுமையான நடவடிக்கைகளைச் சீனா எடுத்து வருகிறது.


உட்புற மங்கோலியாவைச் சேர்ந்த ஈஜின் வட்டாரத்தில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட 35,000 பேர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

சீனா
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!