'ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு கொவிட்-19 அலையை எதிர்பார்க்கலாம்'
ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு கொவிட்-19 அலையை எதிர்ப்பார்க்கலாம் என்று அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.
சிங்கப்பூரில் 10ல் 7 பேருக்கு ஏற்கெனவே கொவிட்-19 தொற்று பாதித்துவிட்டது. அடுத்த கொவிட்-19 அலையில் மீண்டும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோர் அதிகமாக இருப்பார்கள் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 தற்போது தணிந்து சிங்கப்பூரர்கைளிடையே எதிர்ப்புச்சக்தி முன்பைவிட தற்போது அதிகமாக இருந்தாலும் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு கொவிட்-19 அலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஓங் அறிவுறுத்தினார்.
அப்போது கொவிட்-19 அலை தற்போதைய பிஏ.5 ஒமிக்ரான் திரிபுவாக இருக்கலாம் அது வேறு ஒரு திருபுவாகவும் இருக்கக்கூடும் என்று அமைச்சர் விளக்கினார்.
தொற்று பாதிப்பினால் எற்படும் எதிர்ப்பு சக்தி நாளடைவில் வலு இழந்து போகும் என்றும் அதனால் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கையைச் சுகாதார அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றும் திரு ஓங் தெரிவித்தார்.
எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் நோய் தொற்றும் சாத்தியம் கொவிட்-19 தொற்றியவர்களிடயே 5% தான் என்று தரவுகள் தெரிவிப்பதாக அமைச்சர் சுட்டினார்.