தேனியில் கொட்டும் ‘பணமழை’

தேனி: தேனி தொகுதியில் அதி முக பொதுக்கூட்டம், ஊர்வலம், பிரசாரத்தில் 'டோக்கன்' வழங்கி பணம் தரப்படுகிறது என காங்கிரஸ் தேசியச் செயலர் சஞ்சய் தத் குற்றம்சாட்டினார்.
தேனியில் அவர் கூறியபோது, "துணை முதல்வர் பன்னீர்செல்வத் தின் சொந்த தொகுதியான தேனி யில் தண்ணீர் உள்ளிட்ட அடிப் படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வில்லை. தமிழகத்தில் ரயில் ஓடாத மாவட்டம் தேனி.
"நாளை 12ஆம் தேதி காங் கிரஸ் தலைவர் ராகுல் தேனி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். துணை முதல்வர் மகன் போட்டி யிடும் தேனியில் விதிமீறல்கள் நடக்கின்றன.
"பொதுக்கூட்டம், ஊர்வலம், பிரசாரத்தில் 'டோக்கன்' வழங்கி பணம் தரப்படுகிறது. போடியில் ஆணையத்தின் அனுமதியின்றி அதிமுக கூட்டம் நடத்தியுள்ளனர்.
"சேலை, குடம், சுவீட் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் ரூ.25,000, ரூ.30,000 வழங்கப்படுகிறது. இதை கண்காணிக்க சிறப்புப் பார்வையாளரை நியமிக்க வேண்டும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!