48 மணி நேரத்தில் 500 சமூக ஊடகப் பதிவுகள் நீக்கம்

புதுடெல்லி: மக்கள் பிரதிநிதித் துவச் சட்டத்தை மீறியதாக நேற்றுக் காலை வரையிலான 48 மணி நேரத்தில் சுமார் 500 சமூக ஊடகப் பதிவேற்றங்கள் நீக்கப் பட்டுள்ளன. தேர்தல் ஆணையத் தின் வேண்டுகோளுக்கிணங்க ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் ஆகிய சமூக ஊடகங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
கடந்த மார்ச் மாதம் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் இந் திய தேர்தல் ஆணையத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின்கீழ் பதிவேற்றங்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
விதிகளை மீறி பதிவேற்றம் செய்யப்பட்ட கருத்துகளை 48 மணிநேர பரிசீலனைக்குப் பின் னர் நீக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டால் மூன்று மணி நேரத்தில் சமூக ஊடக நிறுவனங்கள் அவற்றை நீக்க வேண்டும் என்பது உடன் பாட்டின் முக்கிய அம்சம்.
சமூக ஊடகப் பயனாளர் களின் கணக்குகள், விளம்பரங் களும் நீக்கப்பட்டவற்றுள் அடங் கும். மொத்தம் 468 ஃபேஸ்புக் கருத்துகள் விதிகளை மீறியுள்ள தாக ஆணையம் புகார் தெரிவித் ததைத் தொடர்ந்து அவற்றை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!