புவனேஸ்வர்: ஒடிசாவைச் சேர்ந்த பிஜு ஜனதா தள எம்எல்ஏ பிரதீப் மகராதி வேட்பாளர்களுக்கு வழங்கப் பணம், மதுப் புட்டிகளைத் தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
அதையடுத்து அங்கு சோதனை நடத்த சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை பிரதீப் மகராதி தாக்கியதால் போலிசார் அவரைக் கைது செய்தனர்.