‘மே 23ல் துள்ளிக் குதித்து வரும் தொண்டர்களை வரவேற்கிறோம்’

சென்னை: அதிமுக ஒருங்கிணைப் பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மே 23ஆம் தேதி வெற்றிக் கோப்பையுடன் துள்ளிக் குதித்து வரும் தொண்டர் களை வரவேற்கக் காத்திருக்கி றோம் என்று கூறியுள்ளனர்.

இம்மாதம் 23ஆம் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கிறது. மேலும் தற்போது நான்கு சட்ட மன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொண்டர்களுக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளனர்.

"சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் காலனால் வர வழைக்கப்பட்டது என்றாலும், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல்களோ அதிமுக வுக்குத் துரோகம் இழைத்தவர் களால் சுயநலவாதிகளின் தனிப் பட்ட லாபத்திற்காக திணிக்கப்பட்ட இடைத்தேர்தலே.

"ஆர்.கே.நகர் தொடங்கி நடந்து முடிந்த தேர்தல் வரை விரோதத்தோடு துரோகமும் மறைமுக தொடர்பு வைத்துக் கொண்டு கட்சியை அழிக்க கங் கணம்கட்டி நின்ற நிலையில் இந்த 4 தொகுதி இடைத்தேர்தலிலோ தங்களது முகமூடியையும் கிழித்து விட்டு திமுகவும் அமமுகவும் அதிமுக ஆட்சியைக் கலைப்போம் என்கிற ஒருமித்த குரலோடு நம் முன்னே நிற்கின்றார்கள்.

"இந்தச் சூழலில் விரோதத்தையும் துரோகத்தையும் வென்றுகாட்டி அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் ஒருநாளும் காலூன்றி நிலைத்த தில்லை என்பதனை மீண்டும் ஒருமுறை தமிழக அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறித்திட நாம் கொள்கை ஆயுதம் ஏந்தி நிற்கிறோம்.

"மலைகொண்ட குன்றம் திருப்பரங்குன்றம், அது எப்போதும் இலை கொண்ட இயக்கத்தின் மன்றம் என்பதை இன்னொரு முறை எடுத்து இயம்பிடவும்; அரவக்குறிச்சி அதிமுகவிற்கு அமோக வெற்றியை முன் மொழியும் ஈரிலை இயக்கத்தின் எழுச்சி என்பதை எடுத்துச் சொல்லிடவும்; சூலூர் சட்டமன்றத் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை என்பதை சூளுரைத்துக் காட்டவும்;

"ஓட்டப்பிடாரம், அதிமுகவின் வெற்றித் தேரோட்டம் நடத்துகின்ற ஓட்டப்பிடாரம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டவும் தொண்டர்கள் அலை அலையாய்த் திரண்டு உண்ணாது உழைத்து, உறங்காது விழித்து, அயராது ஆற்றிவரும் தொண்டினை நினைத்து, என்ன தவம் செய்தோம் இவர்களைத் தொண்டர்களாக பெறவே என்று நெஞ்சம் நெகிழும் வண்ணம் நீங்கள் ஆற்றிவரும் அயராத தொண்டிற்கு நாங்கள் மீண்டும், மீண்டும் தலை வணங்குகின் றோம். வாக்குப்பதிவின் கடைசி விநாடி வரை, தொண்டர்களும் கூட்டணி இயக்கங்களின் லட்சியம் மிகுந்த தோழர்களும் இடையறாது பணியாற்றிட அன் போடு வேண்டி கேட்டுக் கொள் கிறோம்.

"அதிமுக அரசை அசைக்க முடியாத அரசாக நிலைக்க வைப்போம். வெற்றிக் கோப்பை களோடு 23ஆம் தேதி உற்சாகம் துள்ளிவர காத்திருக்கும் உங் களை, இருகரம் கூப்பி வணங்கி வரவேற்கக் காத்திருக்கிறோம்," என்று கடிதத்தில் இருவரும் கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!