தாத்தா தேவ கவுடாவுக்காக பதவியைத் துறக்கும் எம்.பி. ரேவண்ணா

பெங்களூரு: தும்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் தோற்றுப் போன தாத்தா தேவ கவுடாவுக்காக ஹாசன் தொகுதி எம்.பியாகத் தேர்வாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். தும்கூரில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவ கவுடா தோல்வியைத் தழுவினார்.

அவரது பேரனான பிரஜ்வல் ரேவண்ணா மட்டும் ஹாசன் தொகுதியில் வென்றார். இந்நிலையில் தாத்தா தேவ கவுடா மீண்டும் ஹாசனில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்பதற்காக பிரஜ்வல் ரேவண்ணா தமது எம்.பி. பதவியைத் துறக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

ரேவண்ணாவின் வேட்புமனுவில் குளறுபடிகள் இருப்பதாகவும் அதனை விசாரித்த தேர்தல் ஆணையம் 5 பக்க விசாரணை அறிக்கையை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. அதன் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் ரேவண்ணாவின் பதவி பறிபோகும் என்பதால் இத்தகைய அறிக்கையை ரேவண்ணா வெளியிட்டிருக்கக்கூடும் என தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!