இந்தியாவில் 97 நாள்களுக்குப் பிறகு ஒருநாள் கொவிட்-19 தொற்று பாதிப்பு 300க்கு மேல் பதிவானது.
அங்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் புதிதாக 334 பேர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, இப்போதைக்கு கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,686ஆக உயர்ந்தது என்று இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொற்றுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் இருவர் உட்பட மேலும் மூவர் மாண்டுவிட்டதாக இன்று (04-03-2023) வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.
இந்தியாவில் இதுவரை 44,687,496 பேரை கொரோனா தொற்றிவிட்டது. அதனால் 530,775 பேர் இறந்துவிட்டனர்.