பெண்போல வேடமிட்டு ஆண்கள் பங்கேற்ற கோவில் திருவிழா

கேரளாவில் பெண்போல வேடமிட்டு ஆண்கள் பங்கேற்கும் கோவில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி ஆலயத்தில் பல தலைமுறைகளாக சமய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது. 

இந்தக் கோவிலில் முதலில் பெண்கள்தான் வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்பு அம்மனின் சக்தியை தெரிந்துகொண்டதால் ஆண்களும் பெண்கள்போல் வேடமிட்டு வழிபாடுகள் செய்யவும் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவில் இந்தியா முழுவதும் இருந்து 40,000க்கும் மேற்பட்ட ஆண்கள் இந்தக் கோவிலுக்கு வந்து பெண்போல் வேடமணிந்து, சமய விளக்கு என்னும் சடங்கை செய்து வருகின்றனர். 

இவர்களுக்கு ஆடை அலங்காரம் செய்வதற்காகவே ஏராளமான ஒப்பனைக் கலைஞர்களும் காணப்பட்டனர்.

வேண்டுதலுக்காக வருபவர்கள், வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திக்கடன் செலுத்த வருபவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் வருடந்தோறும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர்.

தங்களுடன் வரும் மனைவிகளே தங்களைப் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு இவர்களின் அலங்காரம் இருக்கிறதாம். இதைப் பார்க்கும் பெண்களுக்கு ஆண்கள்மீது மரியாதை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

பலரும் இவர்களுடன் நின்று புகைப்படங்கள் எடுத்துச் சென்றனர்.

நன்றி: புதிய தலைமுறை

Remote video URL
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!