திருடியதாக நினைத்து அடித்ததால் பணியாள் மரணம்

சென்னை: வண்ணாரப்பேட்டை மூலகொத்தளத்தில் உள்ள காந்திமதி என்பவரது வீட்டின் பணியாளான பென் செல்லையா என்பவரது மரணம் தொடர்பில் பலர் கை-து செய்யப்பட்டுள்ளனர். காந்திமதி வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது குறித்து அவர்களுக்கு பென் செல்லையா மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், பணத்தை எடுக்கவில்லை என்று அவர் கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில் பேசின் பிரிட்ஜ் அருகே ஒருவர் அசைவற்றுக் கிடப்பதாக போலிசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலிசார், அந்த நபரின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதைக் கண்டு அவரை மருத்துவமனைக்குச் கொண்டுச் சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து போலிசார் விசாரணையைத் தொடங்கினர்.

அதில், அவர் பென் செல்லையா என்பதும் காந்திமதி யின் மகன் மோகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பென் செல்லையாதான் பணத்தைத் திருடிவிட்டதாக எண்ணி அவரை அடித்து உதைத்ததில் அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக காந்திமதி, அவரது உறவினர் தேவி, குமார் ஆகியோரிடம் போலிசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள். பணத்தைத் திருடியதாக நினைத்துத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!