சென்னை: தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக அளவிலான செல்வந்தர்களைக் கொண்ட முதல் அமைச்சரவை ஜெயலலிதா தலைமையிலான தற்போதைய அமைச்சரவைதான். அதாவது மொத்தம் உள்ள 33 அமைச்சர்களில் 27 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். மற்ற 6 பேரும் லட்சாதிபதிகள் ஆவர். 17 பேர் பட்டதாரிகள். 29 அமைச்சர்களில் 2 பேர் மட்டுமே 40 வயதிற்கும் குறைவானவர்கள். 8 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேர்தல் பிரமாண பத்திரத்தில் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு, வயது, கல்விதகுதி உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 24 அமைச்சர்கள், கோடீஸ்வர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.8.55 கோடி. அதிக சொத்து மதிப்பு கொண்ட அமைச்சர்களில் முதல்வர் ஜெயலலிதா முதலிடத்திலும் (ரூ.113.73 கோடி),கே.சி.வீரமணி 2வது இடத்திலும் (ரூ.27.67 கோடி), பெஞ்சமின் 3வது இடத்திலும் (ரூ.23.02 கோடி) உள்ளனர். மிகக் குறைந்த சொத்து மதிப்பு கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். இவரது சொத்து மதிப்பு ரூ.31.75 லட்சம்.
அமைச்சர்களில் 8 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களில் 4 பேர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 17 அமைச்சர்கள் பட்டம் அல்லது பட்ட மேற்படிப்பு முடித்தவர்களாகவும், 12 பேர் 12ம் வகுப்பு அல்லது அதற்கும் குறைவான கல்விதகுதி உடையவர்கள்.2016-05-28 06:00:00 +0800