செய்தித்துறை விதிமீறல்: கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக அரசின் செய்தித்துறை அதிகாரிகள் விதிமுறைகளை மீறிச் செயல் பட்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்குமா? என அவர் வெளி யிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன்னர் 'வாக்காளர்களுக்கு வேண்டு கோள்' என்ற தலைப்பில் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கையை அரசு செய்தித்துறை ஊடகங்களுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இது விதிமுறைகளை மீறிய செயல்பாடு என்பதே கருணா நிதியின் குற்றச்சாட்டாகும். "கடந்த மே 12ஆம் தேதி யுடன் தமது தேர்தல் பிரசா ரத்தை முடித்துக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அதற்குப் பிறகு அறிக்கைகள் வாயிலாக வாக்குகளை சேகரித்து வந் தார். அவ்வாறு மே 14ஆம் தேதி மதியம் 1.06 மணிக்கு அதிமுக தோழர்களுக்கு ஜெய லலிதா விடுத்த அறிக்கையை, அரசு செய்தித்துறை அதிகாரி கள் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளனர். "இது பற்றி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உடனடி யாக திமுக அமைப்புச் செயலா ளர் மூலமாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால் இல்லை," என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!