மும்பை: எச்ஐவி தாக்கம் கண்டபிள்ளைகளை நெருங்கிய உறவினர்கூட பராமரிக்காமல் ஒதுக்கிவைக்கும் வேளையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 22 பேரை சொந்தப் பிள்ளைகளைப் போலவே பராமரித்து வருகின்றனர் மும்பையைச் சேர்ந்த தம்பதி. இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான திரு ரெஜி மும்பையில் உள்ள டிஒய் படில் மருத்துவமனையைக் கடந்து சென்றபோது மருத்துவமனைக்கு வெளியே பசியுடன் படுத்திருந்த சிறுமியைக் கண்டு அவருக்கு உணவு வாங்கிக் கொடுக்க முன்வந்தார். ஏற்கெனவே பெற்றோரை இழந்திருந்த அந்தச் சிறுமி எச்ஐவி தாக்கம் கண்டிருந்தார். சிறுமியின் விருப்பப்படி நூடல்ஸ் வாங்கித் தர எண்ணிய ரெஜி மறுநாள் நூடல்ஸ் உணவுடன் மருத்துவமனைக்குச் சென்றார்.
ஆனால் அந்தச் சிறுமி இறந்துபோன செய்தியையே அவரால் தெரிந்துகொள்ள முடிந்தது. இத னால் மிகவும் மனம் வருந்திய திரு ரெஜி, இதுபோன்ற ஆதர வற்ற சூழலில் வேறு யாரேனும் இருந்தால் தமக்குத் தகவல் அளிக்கும்படி மருத்துவ மனையைக் கேட்டுக்கொண்டார். 2009ஆம் ஆண்டு எச்ஐவி தாக்கம் கண்ட இரு பிள்ளைகளைத் தம் குடும்பத்துடன் சேர்த்துக்கொண்டு நாவி மும்பையில் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த ரெஜியுடன் தற்போது எச்ஐவி தாக்கம் கண்ட 22 பிள்ளைகள் வசித்து வருவதாக இந்தியாடைம்ஸ் தெரிவித்தது. தொடக்கத்தில் பொருளாதாரச் சிக்கல் இருந்தபோதும் பின்னர் பலர் உதவி வழங்க ஆரம்பித்ததாகச் சொன்னார் ரெஜி. வீட்டில் இருக்கும் 24 பேரிடமும் பாரபட்சம் பார்க்காமல் கவ னித்துக்கொள்வதாகக் கூறிய திரு ரெஜி, தமது மனைவி உறுதுணையாக இருப்பதைப் பெருமையாகக் கூறினார். உணவு, மருந்து ஆகியவற்றை அளித்துப் பராமரிப்பதுடன் பிள்ளைகளுக்கு நல்ல முறையில் கல்வியும் வழங்குகின்றனர் இந்தத் தம்பதியர்.