சென்னை: மிக விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடை பெற உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. உள்ளாட்சி அமைப்பு களில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண் வாக் காளர்கள் அதிகம் உள்ள இடங்களை கண்டறியும் பணி முடிந்துவிட்டது. இதை அடிப்படையாக வைத்து பெண்களுக்கான உள்ளாட்சி பதவிகள் பிரிக்கப்பட உள்ளன.
சென்னை மாநகராட்சி யில் ஆண்களைவிட பெண் வாக்காளர் அதிகம். எனவே, சென்னை மாநகராட்சிக்கு பெண் மேயரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.