மழை பெய்ய வேண்டி 10 கிராமத்தை விட்டு பெண்கள் வெளியேற்றம்

திருப்பூர்: மழை பெய்ய வேண்டி தாராபுரம் அருகே 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பெண்கள் ஊரை விட்டு வெளியேறி, வினோத வழிபாடு நடத்தி னர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே வடுக பாளையம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதித்து, குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே, தொன்றுதொட்டு நடத்தப்படும் பாரம்பரிய வழிபாட்டை நடத்தினால் மழை பெய்யும் என கிராமப் பெரியவர்கள் ஆலோசனை வழங்கினர். அதன்படி நூற்றுக்கணக்கான பெண்கள் மூன்று நாட்களாக மழை வேண்டி விரதம் இருந்தனர். 'வறட்சி அரக்கன்' உருவப் பொம்மையையும் ஊர் எல்லையில் வைத்து எரிந்தனர். "வறட்சி நிலவும் கிராமத்தில் இனியும் வசிக்க முடியாது," என்று கூறி, ஊரை காலி செய்துவிட்டு வெளியேறினர். கிராமப் பெரியவர்கள், "நிச்சயம் மழை பெய்யும். ஊருக்குத் திரும்பி வாருங்கள்," என்று கூறி பெண்களைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!