கச்சத்தீவு விழாவில் பங்கேற்போம்: ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு

ராமேசுவரம்: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று மத் திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு செல்வதற்கு தமிழக மீனவர்களுக்கு எப்போதுமே உரிமை உண்டு என்றும் தேவாலய விழாவில் பங்கேற்கப்போவதாகவும் ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என்று இந்திய அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார். "கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவுக்கு சென்று அந்தோணியார் ஆலய விழாக்களில் கலந்துகொள்கிறோம். எனவே, சிறுபான்மை சமுதாய மக்களின் மனதைப் புண்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை முறியடிப்போம்," என்றார் ஜேசுராஜா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!