பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கின் தொடர்பில் ஜெய லலிதாவின் 21 ஆயிரத்து 280 கிராம் தங்கம் (2,660 பவுன்), 1,250 கிலோ வெள்ளி ஆபரணங்கள், ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 10,500 உயர் ரக புடவைகள், 750 காலணிகள், 91 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை, தற்போது 4 காவல்துறையினர் பெங்களூருவில் காவல் காத்து வருகின்றனர். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்துக் கர்நாடக அரசு, திமுக செய்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முதல் குற்றவாளியாக சேர்க்கப் பட்டிருந்த ஜெயலலிதா மரண மடைந்துவிட்டார். இந்த வழக்கு இப்போது என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தின்போது வைரத்திலான ஒட்டியாணம், வளையல், சங்கிலிகள் அணிந்து தன் தோழி சசிகலாவுடன் ஜெயலலிதா எடுத்துக்கொண்ட படம்.