தமிழக முதல்வராக வி.கே.சசிகலா இன்று பதவி ஏற்பதற்கான ஏற் பாடுகள் அவசரமாக நடைபெற்று வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக அதிமுக எம்எல்ஏக் களால் நேற்று முன்தினம் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக அப்பதவியை விட்டு விலகினார். பன்னீர்செல்வத்தின் விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவ் நேற்று கடிதம் மூலம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ கத்தின் முதல்வராக சசிகலா பதவி ஏற்பது குறித்த ஆலோசனை கள் தொடங்கின. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று முன்தினமும் நேற்றும் சசிகலாவைச் சந்தித்து பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். சசிகலா பெயரிலான டுவிட்டர் பதிவில் நாளை (இன்று) முதல் வராகப் பதவி ஏற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது சசிகலாவின் அதிகாரபூர்வ டுவிட் டர் பக்கம்தானா என்று உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையே, அதிமுக பெதுச் செயலாளர் சசிகலா உள்பட நான்கு பேர் மீதான செத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப் படும் என உச்ச நீதிமன்றம் அதிர டியாக அறிவித்துள்ளது. இதனால் சசிகலா முதல்வராக பதவியேற் பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.