சென்னை: ஆர்.கே. நகரில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். "எப்பொழுது தேர்தல் நடந்தாலும் அங்கு மீண்டும் நானே போட்டியிடுவேன்," என்றார் அவர். அண்மையில் ஆர்.கே. நகர் தொகுதியில் ஏராளமான பணப் பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதைத் தொடர்ந்து இடைத்தேர்தலை ஆணையம் ரத்து செய்தது. இந்த நிலையில் ஆர்.கே. நகர் தொகுதிக்கு நேற்று முன்தினம் வந்த டி.டி.வி. தினகரன், செய்தியாளர் களிடம் பேசினார். "ஆர்.கே.நகரில் எப் பொழுது தேர்தல் நடந்தாலும் 'அதிமுக அம்மா' அணி சார்பாக மீண்டும் நானே போட்டியிடுவேன்," என்று அவர் கூறினார். தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்று ஸ்டாலின் கூறியதற்குப் பதில் அளித்த அவர், "அவர் எப்பொழுது ஜோசியராக மாறினார்," என்று கேள்வி எழுப்பினார்.
டி.டி.வி. தினகரன்: ஆர்.கே. நகரில் மீண்டும் போட்டியிடுவேன்
14 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Apr 2017 06:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!