லண்டன்: கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே விஜய் மல்லையா நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பிச் சென்றார் தொழிலதிபர் விஜய் மல்லையா. கொடுத்த கடனுக்காக, விஜய் மல்லையாவின் சொத்துகளை இந்திய வங்கிகள் முடக்கியுள்ளன. தற்போது அவை ஒவ்வொன்றாக ஏலத்துக்கு விடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் நேற்று காலை விஜய் மல்லையாவை லண்டனில் கைது செய்தனர். இதையடுத்து வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே மல்லையா நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.