சென்னை: சென்னையில் சாலை ஓரங்கள், கோயில்கள், கடற்கரை என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பிச்சையெடுப்பவர் களைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் பெருநகர காவல் ஆணையர் கரண் சின்கா தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் பிச்சை எடுக்கும் சிறுவர்களை மீட்பதற் காக நேற்று முன்தினம் போலிசார் நடத்திய திடீர் சோதனையில் 76 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர். சென்னை மாநகரப் போலிஸ், சமூகநலத் துறை, அரசு சாரா அமைப்புகள் ஆகியன இணைந்து இந்தச் சோதனைகளை நடத்தின. சிறார்களைப் பலவந்தமாகப் பிச்சை எடுக்க வைத்ததாக ஏராள மானோரை போலிசார் கைது செய் தனர். அவர்களில் பெரும்பாலா னோர் குழந்தைகளின் பெற்றோர் என்று தங்களைக் கூறியதால் அதற்கான ஆவணங்களை அவர் களிடம் கேட்டிருப்பதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.