புதுடெல்லி: டெல்லியில் மாநகராட்சிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், பாஜக ஆகிய அணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஒரு கோடிக்கும் மேலான வாக்காளர்களைக் கொண்டுள்ள டெல்லி மாநகராட்சியில் 1.1 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் முதன்முறையாக வாக்குரிமை பெற்றனர்.
டெல்லியில் உள்ள 272 தொகுதிகளுக்கு இத்தேர்தல் நடைபெற்றது. அண்மையில் நடைபெற்ற ராஜோரி இடைத்தேர்தலிலும் மேலும் இரண்டு மாநகராட்சித் தேர்தல்களிலும் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. இதனிடையே நேற்றைய தேர்தலில் குறைவான வாக்குகளே பதிவானதாகக் கூறப்பட்டது. இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 4 மணிவரை 42% வாக்குகளே பதிவானதாக தகவல்கள் வெளியாகின. எதிர்வரும் புதன்கிழமை வாக்குகள் எண்ணப்படவுள்ளன.