புதுடெல்லி: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் பெற்றதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் பரபரப்புக் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். "அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து முதல்வர் கெஜ்ரிவால் ரூ.2.5 கோடி லஞ்சம் பெற்றார். என் கண் எதிரில் தான் சத்யேந்திர ஜெயின் லஞ்ச பணத்தை கொடுத்தார்," என டெல்லியில் அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா கூறியுள்ளார். டெல்லி சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக இவர் நேற்று முன்தினம் அதிரடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று துணைநிலை ஆளுனரை மிஸ்ரா சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரா, "சக அமைச்சரான சத்யேந்திர ஜெயின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ரூ.2.5 கோடியை லஞ்சமாகக் கொடுத்தார். ரூ.50 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பெறு வதற்காக சத்யேந்திர ஜெயின் லஞ்சத்தைக் கொடுத்துள்ளார். "இது பற்றி நான் கேட்டதற்கு முதலில் பதில் சொல்ல மறுத்த கெஜ்ரிவால் பின்னர் அரசியலில் இது எல்லாம் சாதாரணம் எனக் கூறினார்.
"கெஜ்ரிவால் என்னை அமைச் சரவையில் இருந்து நீக்கியது தவறு. அவர் கட்சியில் குடும்பத் தினருக்கே முக்கியத்துவம் அளிக்க நினைக்கிறார். "நான் அமைச்சராகப் பொறுப் பேற்றதும் ஷீலா தீட்சித் பற்றி கெஜ்ரிவாலிடம் அறிக்கை அளித் தேன். "ஆம்ஆத்மி என் கட்சி. இதில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது. எதற்காக பணம் வாங்கினார் என்ற உண்மையைக் கெஜ்ரிவால் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.