இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்குச் செல்லப்போவதில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை காரணமாக 54 பேர் மாண்டதாக பாஜக கூறியதை ஊடக அறிக்கைகள் வழி தெரிந்துகொண்டதாகக் கூறிய திருவாட்டி மம்தா, இது சுத்தப் பொய் என்றும் இதனால் தாம் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
திருவாட்டி மம்தா நடந்த உண்மையை மறைக்கப் பார்ப்பதாக பாஜக குறைகூறியுள்ளது.