புதுடெல்லி: இந்தியாவின் விமான நிறுவனங்கள் இப்போது படுமோசமாக ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம், (IATA) பிரதமர் மோடியிடம் அவசர அவசரமாகத் தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக விமானப் பயணங்கள் தடைபட்டுள்ளன. அதனால் இந்திய விமானப் போக்குவரத்து துறையில் 5.75 லட்சம் வேலைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று அந்த உலக நிறுவனம் இந்தியப் பிரதமரை எச்சரித்து இருக்கிறது.
கிருமி பரவல் மிரட்டல் காரணமாக 2020ல் இந்தியாவில் விமானப் போக்குவரத்து துறைக்குப் பயணிகள் குறைவு காரணமாக US$2.1 பில்லியன் இழப்பு ஏற்படும் என்றும் பயணிகள் எண்ணிக்கை 9% குறைந்து விடும் என்றும் சங்கம் மதிப்பிடுகிறது.
இதை அந்தச் சங்கத்தின் தலைமை இயக்குநர் அலெக்சாண்டர் டி ஜுனிக் ஒரு கடிதம் மூலம் இந்தியப் பிரதமருக்குத் தெரிவித்து இருக்கிறார்.