கொரோனா கிருமி தொற்றியோர் எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சியது டெல்லி

இந்தியாவில் நேற்று திங்கட்கிழமை ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 16,893 அதிகரித்துள்ளது.

மேலும் திங்கட்கிழமை ஒரே நாளில் புதிதாக 18,522 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,66,840 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளையில் செவ்வாய்கிழமை காலை வரையிலான நிலவரப்படி 13,099 பேர் கொவிட் 19 நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,34,821ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொவிட் 19 நோயால் தாக்கப்பட்டவர்களில் இதுவரை 59 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர் என்றும் தற்போது சுமார் 2.15 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் அங்கு கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை சுமார் 99 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 7,414 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!