உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் நகரில் நால்வர் கும்பலால் சீரழிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பின் உயிரிழந்த 19 வயதுப் பெண்ணின் உடலை போலிசார் இன்று அதிகாலையில் எரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தங்களை வீட்டிற்குள்ளே வைத்து போலிசார் பூட்டிவிட்டதாக அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச முதல்வரிடம் நேரில் பேசியதை அடுத்து, அந்த வழக்கின் தொடர்பில் மூவர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.