கொடக்கால்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிட்டால் மாவட்டத்தில் இருக்கும் கொடக்கால் என்ற ஊரைச் சேர்ந்த கவிதா ஜோஷி என்ற மாது, ஹால்வாணி என்ற ஊரில் நடந்த தன் உறவினரான மிட்டிகா என்பவரின் திருமணத்தில் கலந்துகொண்டார்.
கொவிட்-19 விதியை மீறாமல் முகக்கவசம் அணிந்துகொண்டார். ஆனாலும் நகை அலங்காரத்தை விடவில்லை.
"கொவிட்-19 விதியை மீறக்கூடாது. அதேவேளையில் பரம்பரை பழக்கவழக்கத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். ஆகையால்தான் இப்படி நகை போட்டுக்கொண்டேன்," என்று இந்த மாது கூறியதாக 'டைம்ஸ் நவ்' செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இந்தப் படம் சமூக ஊடகங்களில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. சிலர் இதை வரவேற்கிறார்கள். சிலர் அளவுக்கு மீறிய அலங்கார ஆசை என்று எதிர்க்கிறார்கள்.