மும்பை: ஆசியாவின் பெரும் பணக்காரரான இந்தியாவின் முகேஷ் அம்பானி, வாரம் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும் 7-லெவன் கடைகளை இந்தியாவிற்குக் கொண்டு வருகிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் ஆகப்பெரிய சங்கிலித் தொடர் நிறுவனங்களில் ஒன்றான 7-லெவன் நிறுவனத்துடன் ‘பியூச்சர் ரீடெயில்’ சில்லறை வணிகக் குழுமம் உடன்பாடு செய்துகொண்டு இருந்தது.
ஆனால், அந்த உடன்பாடு முடித்துக்கொள்ளப்பட்டுவிட்டது. இதனையடுத்து, அம்பானியின் ‘ரிலையன்ஸ் ரீடெயில்’ நிறுவனம், 7-லெவன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
முதலாவது 7-லெவன் கடை வரும் 9ஆம் தேதி சனிக்கிழமை மும்பை புறநகர்ப் பகுதியில் திறக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, மும்பையில் பல பகுதிகளிலும் விரைவில் அந்தக் கடைகள் திறக்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.