கௌகாத்தி: அசாம் மாநிலம் சில்சார் நகரிலிருந்து நேற்றுக் காலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் 'லேண்டிங் கியர்' ஒன்று பழுதடைந்தது.
இதனைக் கண்டறிந்ததால் விமானம் புறப்பட்ட உடனேயே தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. பயணிகளில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அசாமின் குல்குராம் விமான நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. கோல்கத்தா செல்லக்கூடிய அந்த விமானத்தின் பின்சக்கரத்தில் கோளாறு கண்டறி யப்பட்டது.
ஏர்பஸ் ஏ319 என்ற இந்த விமானம் ஒரு குறுகிய முதல் நடுத்தர வகையைச் சேர்ந்தது. 124 முதல் 156 பயணிகள் வரை அமரும் வசதி கொண்டது. அக்டோபர் 22ஆம் தேதி, பயணி ஒருவருக்கு மூச்சுத்திணறலும் மயக்கமும் ஏற்பட்டதால் டெல்லி நோக்கிச் சென்ற விஸ்தாரா விமானம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.