மும்பை: மும்பை விமான நிலையத் தில் விமானங்களை இழுத்துச் செல்லும் வாகனத்தில் நேற்று திடீரென தீ மூண்டது.
கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீ அணைப்பாளர்கள் உடனடியாகச் செய்லபட்டு அணைத்தனர். அந்த இழுவை வாகனத்திற்கு மிக அருகில்தான் மும்பையில் இருந்து ஜாம்நகருக்கச் செல்லும் ஏர் இந்தியா விமானம் 85 பயணிகளுடன் நின்றுகொண்டிருந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்துக்கும் விமானத்தில் இருந்தவர்களுக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தை நகர்த்து வதற்காகப் பயன்படுத்தப்படும் அந்த வாகனத்தில் தீ மூண்டதற்கான காரணம் தெரியவில்லை.