திருப்பதியில் அலைமோதும் பக்தர் கூட்டம்: 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதியில் கடந்த 8ஆம் தேதி முதல் நேற்று(ஆகஸ்ட் 10) வரை 3 நாட்கள் பவித்திர உற்சவம் நடந்தது. பவித்திர உற்சவத்தையொட்டி வி.ஐ.பி பிரேக் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி தனிமையில் பவித்திர உற்சவம் நடந்தது. இந்த ஆண்டு பவித்திர உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

பவித்திர உற்சவத்தில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். மேலும் சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தின விடுமுறை ஆகியவற்றையொட்டி பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

வைகுந்தம் காம்ப்ளக்சில் 25 அறைகளும் நிரம்பி நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். 15 முதல் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். நேற்று திருப்பதியில் 74,497 பேர் தரிசனம் செய்தனர். 36,244 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!