எறும்புகளின் ஆட்சியை ஒழிக்க வீட்டையே தரைமட்டமாக்கிய ஆடவர்

இரண்டு ஆண்டுகளாக கறுப்பு எறும்புகளின் தொல்லைக்கு ஆளாகியது, ஒரு குடும்பம்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திலுள்ள ஜபல்பூரில் அமைந்த ஷாபுரா கிராமத்தில் ஆடவர் ஒருவரது வீட்டுக்குள் எறும்புகள் ஊடுருவிவிட்டன.

ஆடவர், அவரின் மனைவி, 9 மற்றும் 7 வயதில் இருக்கும் பிள்ளைகள் இதனால் பெரிதும் பாதிப்படைந்தனர்.

பிள்ளைகள் எறும்புக்கடிக்கும் ஆளாகினர்.

எறும்புகளை வீட்டை விட்டு விரட்ட ஆடவர் எண்ணற்ற முயற்சிகளில் இறங்கியும் எதுவும் பலனளிக்கவில்லை.

மேலும், அந்தக் கிராமத்தில் ஆடவரின் வீட்டில் மட்டுமே எறும்புகள் குடிபுகுந்தன. நாளுக்கு நாள் எறும்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இறுதியாக, பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி கட்டிய அந்தச் சிறு மண்வீட்டைக் கோடரியால் இடித்துத் தள்ளத் தொடங்கினார் ஆடவர்.

சில மணிநேரத்தில் அந்த வீடே தரைமட்டமாகியது.

எறும்பு பிரச்சினை தீர்ந்தது. ஆனால், புது பிரச்சினை உதயமானது. அந்தக் குடும்பத்துக்கு இப்போது வீடில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!