சம்பா (இமாச்சலப் பிரதேசம்): இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சம்பா நகரை வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.
அந்நகரம் மட்டுமின்றி மனாலி போன்றவற்றிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவோ உயிர் சேதம் இருந்ததாகவோ இதுவரை தகவல் இல்லை.
மனாலியில் நில அதிர்வு சில நொடிகள் நீடித்ததாக உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டனர். உள்ளூர் நேரப்படி 9.34 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உலுக்கியதென இந்தியாவின் தேசிய பூமி விவகார அமைப்பு தெரிவித்தது.
திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 1) இமாச்சலப் பிரேதசத்தின் சாமோலி உள்ளிட்ட பகுதிகளை இதைவிட குறைந்த சீற்றத்துடனான நிலநடுக்கம் உலுக்கியது.
கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்கு முன்பு இமாச்சலப் பிரேதசத்தை மிக மோசமான நிலநடுக்கம் உலுக்கியது. 1905ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி நிகழ்ந்த அதில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர்.