தமிழர் பேரவை தலைமையில் 26 அமைப்புகள் ஒன்றிணைந்து சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா நடத்தின. தமிழக அரசு, மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்கம் வாயிலாக வழங்கும் அயலகத் தமிழ் இலக் கியப் பணிகளுக்கான விரு தினை சிங்கப்பூர்த் தமிழ் எழுத் தாளர் கழகத் தலைவர் திரு. நா.ஆண்டியப்பன் அண்மையில் பெற்றார். அவருக்கு கடந்த 5ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச் சாமி அவ்விருதினை வழங்கி னார். அதனுடன் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங் கப்பட்டது. தமிழக அரசு அயலகத் தமிழ் அறிஞர்களுக்கான இத்தகைய விருதினை வழங்கியிருப்பது இதுவே முதல் முறை. அந்த வகையில் 2016ஆம் ஆண்டிற் கான அயலகத் தமிழ் இலக்கிய விருதினைப் பெற்ற முதல் இலக் கியவாதி திரு. நா. ஆண்டியப்பன்.
தொழிலாளர் தினத்தன்று ஆனந்த பவன் உணவக மாடியில் நடந்தேறிய பாராட்டு விழாவில் திரு. நா.ஆண்டியப்பனுடன் அமைப்புகளின் பொறுப்பாளர்கள். படம்: தமிழர் பேரவை